×

நீட் தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மதுரையில் நாளை உண்ணாவிரத போராட்டம்

மதுரை, ஆக. 23: மதுரையில் நாளை நீட்தேர்வை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி நடக்கும் உண்ணாவிரதப்போராட்டத்தில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணிகள் பங்கேற்கின்றன. இது குறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏ கோ.தளபதி மற்றும் சேடபட்டிமணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து அவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும் (24.08.2023) வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி அளவில் அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞர், மாணவர், மருத்துவர் அணிகள் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது.

இதில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரணி மாணவரணி மருத்துவரணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நீட் தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மதுரையில் நாளை உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Hunger strike ,Madurai ,DMK ,Union government ,strike ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...